Facebook Badge
தீயெனச்சுடும் தனிமை
உன்னையிழந்த நாட்கள் பற்றி
இதோ...இன்னுமொரு கவிதை...!
பிரிவுச்சிலுவையில் அறையப்பட்ட
என் காதலின் வலி
உயிரின் அத்தனை அணுக்களிலும்
பாறாங்கல்லாய் கனகனக்கிறது..
எனது கவிதைகளின்
கண்ணீர்த்துளிகளில்
உருண்டுகொண்டேயிருக்கின்றன
உன்னோடான என் நினைவுகள்..
தீயின் நிழலில்
எரிந்து சாம்பலாகும்
என் தனிமையின் ரணங்கள்
கர்ண கொடூரமானவை.
காரணமற்ற பிரிவு
காதலுக்கு மட்டும்
எப்படித்தான் வந்து தொலைக்கிறதோ..?
நீ நான்
நாமாகி
நாம்
மீண்டும்
நீ நானானோம்..
அப்படி ஏனானோம்..?
நமக்கே தெரியவில்லை.
பார்த்துக்கொண்ட பார்வைகள்
பேசிக்கொண்ட வார்த்தைகள்
முத்தமிட்ட உதடுகள்
சேர்ந்திருந்த மனசுகள்
எல்லாமும் இன்று
பாழடைந்த சினைவுகளாய்
நிர்மூலமானது ஏன் பெண்ணே...?
காற்றில் கிழிபடும்
நூலறுந்த காற்றாடியாய்
நம் வாழ்க்கை..
போகும் திசையும் புரியவில்லை
சேரும் வழியும் தெரியவில்லை..
மீண்டும் ஒரு முறை
பார்க்கும் ஆவல் எனக்கில்லை.
வலிக்க வலிக்க
நகரும் நாட்களில்
இன்னும் வலியேற்றத்திராணியற்ற
நாணல் நான்..!
இனி
உன் வழியில் நீ
என் வழியில் நான்..
ஆயினும்
எவ்வழியில் நம் காதல்????
அதற்கு மட்டும் விடை சொல்லிப்போ..!
நிந்தவூர் ஷிப்லி
YOUTUBE TOP VIDEO
ஷிப்லியின் கவிதைகள்
எனது வலைப்பதிவு பட்டியல்
-
Google வேண்டாம் - Perplexity.ai போதும்?! - சாட்ஜிபிடி, மைக்ரோசாப்ட் கோபைலட் போன்ற செயற்கை நுண்ணறிவு (சுருக்கமாக செய்யறிவு) chatbot-களுக்கு போட்டியாக perplexity.ai வந்து மக்கள் மனதை கவர்ந்த...1 மாதம் முன்பு
-
பொன்னியின் செல்வன் - ஒலி நூல் - பொன்னியின் செல்வன் - என் பால்ய வயதுக் கனவு அது. என் கனவுகளில் எனக்கு double acting.வந்தியத்தேவனும் நானே; அருண்மொழிவர்மனும் நானே..திரைப்படமாக வந்தால்..அப்பட...1 ஆண்டு முன்பு
-
கிறுக்கல்கள் - நீ தத்தி தத்தி வந்து தங்கமுலாம் பூசவே ஏங்கி தவித்து கொண்டிருக்கிறது நம் வீட்டு சுவர்கள்!..4 ஆண்டுகள் முன்பு
-
நேர்கொண்ட பார்வை- இந்த மாதிரி படமெல்லாம் எதுக்கு? - அஜித் ஏன் திடீர்னு ரிமேக் பண்ணாருனு ஒரு சந்தேகம் வந்துச்சு. [image: Image result for nerkonda paarvai] சந்தேகத்த சுக்குநூறு ஆக்கி தனது சமூக பார்வையை நேர்கொ...4 ஆண்டுகள் முன்பு
-
குமாரி 21 F – செம ஹாட் மச்சி - எனக்கு இயக்குனர் சுகுமாரின் திரைப்படங்கள் என்றால் மிகவும் பிடிக்கும். தன் எழுத்தில் ஏதோ ஒரு மேஜிக்கை வைத்துக் கொண்டிருப்பவர் அவர். ஊருக்கே பிடித்த ’ஆர்யா’ ...8 ஆண்டுகள் முன்பு
-
வலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள் - கொண்டல் வண்ணனைக் கோவலனாய் வெண்ணை உண்ட வாயன் என்னுள்ளங்கவர்ந்தானை அண்டர் கோன் அணியரங்கன் என்னமுதினைக் கண்ட கண்கள் மற்றொன்றினைக் காணாவே ஆண்டாள்.. திருப்பாண...8 ஆண்டுகள் முன்பு
-
Rewarding Life - *"If you want your life to be more rewarding, you have to change the way you think."* * - Oprah Winfrey*11 ஆண்டுகள் முன்பு
-
உன்னுடன் வாழ்கிறேன்.. - அவனது கண்கள் நடைப்பழகாத இரு குழந்தைகள் என்னை காணாத அந்த ஒரு நிமிடம்.. என்னுள் இருக்கும் உன்னோடு சேர்ந்து மிதந்து போகிறேன் மேகமாய்.. என்னுடன் நான் உணர்...12 ஆண்டுகள் முன்பு
-
-
-
6 கருத்துகள்:
After reading your poem My thoughts went back to 1975>>>Poet Meera at that written a book>>."kanavukal/karpanaigal>>kagithangal.Your poem create such a impact-such a pain -again in my heart..Well done.write more >.select correct magazines>>send with out any tired or disappointed regylarly.Catch a "Place "in the literary world.My congratulations and wishes to you Sir.--vimalavidya-Chalakkuddy
thanks vimalavidya
வாழ்த்துக்கள் உங்கள் பணிக்கு.....
அன்பின் ஷிப்லி
அருமையான கவிதை - காதல் பிரிவின் துயரத்தினை அழகாகப் படம் பிடித்துக் காட்டும் கவிதை.
அவரவர் வழியில் அவரவர்கள்
காதல் யார் வழியில் - அருமையான கேள்வி
நூலறுந்த காற்றாடி தடுமாறுகிறது
பார்த்த பார்வையும், பேசிய வார்த்தையும், இனித்த முத்தமும் நினைவுச் சின்னங்களாகி விட்டனவே !
தனியாக இருந்த இருவர் சேர்ந்து ஒருவராகி - பிறகு பிரிந்தால் .......
ம்ம்ம் - காதல் தொல்வி அல்ல அல்ல - காதல் பிரிவு பொறுக்க இயலாது
நல்ல சிந்தனை - நல்ல சொற்கள் - நல்வாழ்த்துகள் ஷிப்லி
thanks praba...
you are always motivating me..
thanks forever..
be in touch sir
shibly.FHA
thanks cheena sir..
I would like to thank yoy..coz,you are a wonderful reader.
keep it up sir
கருத்துரையிடுக