Facebook Badge
எல்லாமே சந்தர்ப்பம் கற்பிக்கும் 'தப்பர்த்தம்'
எல்லாமே சந்தர்ப்பம்
கற்பிக்கும் 'தப்பர்த்தம்'
மிக
அண்மையில் நாடோடிகள் திரப்படத்திலிருந்து ஹரிஹரன் பாடிய ஒரு காதல்
பாடலைக்கெட்க நேர்ந்தது…இப்பாடலை எனக்கு அறிமுகம் செய்த நண்பர் லோஷனுக்கு
சிறப்பு நன்றிகள்…ரொம்ப நாட்களுக்குப்பிறகு அற்புதமான ஒரு பாடலாக
உருவாக்கப்பட்டிருக்கும் இப்பாடலை இரவு நேரத்தில் தனிமையில்
கேட்டுப்பாருங்கள்….
உலகில் எந்த காதல் உடனே ஜெயித்தது..
வலிகள் தாங்கும் காதல் மிகவும் வலியது
காதல் தோற்றதாய் கதைகள் ஏது?
தோற்றால் தோற்றது காதல் ஆகாது.
எல்லாமே சந்தர்ப்பம்
கற்பிக்கும் தப்பர்த்தம்
உலகில் எந்த காதல் உடனே ஜெயித்தது..
வலிகள் தாங்கும் காதல் மிகவம் வலியது
நினைவுகளாலே நிச்சயதார்த்தம் நடந்தது அவனோடு..
அவனில்லாது அடுத்தவன் மாலை ஏற்பது பெரும்பாடு
ஒரு புறம் தலைவன் மறுபுறம் தகப்பன் இதற்குள் எறும்பானாள்
பாசத்துக்காக காதலை தொலைத்து ஆலையில் கரும்பானாள்
யார் காரணம் ? யார் காரணம் ?
யார் பாவம் யாரைச்சேரும் யார்தான் சொல்ல..
கண்ணீர் வார்த்தாள் கன்னி மானே
சுற்றம் செய்த குற்றம்தானே..
உயிரில் பூக்கும் காதல் உணர்வின் ஆழ்நிலை
உணர்வைப்பார்ப்பதேது உறவின் சூழ்நிலை.
மனமெனும் குளத்தில் விழி என்னும் கல்லை முதல் முதல் எறிந்தாளே..
அலையலையாக ஆசைகள் எழும்ப அவள் வசம் விழுந்தானே
நதிவழி போனால் கரைவரக்கூடும் விதிவழி போனானே..
விதையொன்று போட வேறொன்று முளைத்த கதையென்று ஆனானே
என் சொல்வது..???என் சொல்வது ?
தான் கொண்ட நட்புக்காக தானே தேய்ந்தான்
கற்பைப்போலே நட்பைக்காத்தான்..
காதல் தோற்கும் என்றா பார்த்தான்..
உலகில் எந்த காதல் உடனே ஜெயித்தது..
வலிகள் தாங்கும் காதல் மிகவும் வலியது
காதல் தோற்றதாய் கதைகள் ஏது?
தோற்றால் தோற்றது காதல் ஆகாது.
எல்லாமே சந்தர்ப்பம்
கற்பிக்கும் தப்பர்த்தம்
உலகில் எந்த காதல் உடனே ஜெயித்தது..
வலிகள் தாங்கும் காதல் மிகவும் வலியது
உயிரில் பூக்கும் காதல் உணர்வின் ஆழ்நிலை
உணர்வைப்பார்ப்பதேது உறவின் சூழ்நிலை.
YOUTUBE TOP VIDEO
ஷிப்லியின் கவிதைகள்
எனது வலைப்பதிவு பட்டியல்
-
Google வேண்டாம் - Perplexity.ai போதும்?! - சாட்ஜிபிடி, மைக்ரோசாப்ட் கோபைலட் போன்ற செயற்கை நுண்ணறிவு (சுருக்கமாக செய்யறிவு) chatbot-களுக்கு போட்டியாக perplexity.ai வந்து மக்கள் மனதை கவர்ந்த...1 மாதம் முன்பு
-
பொன்னியின் செல்வன் - ஒலி நூல் - பொன்னியின் செல்வன் - என் பால்ய வயதுக் கனவு அது. என் கனவுகளில் எனக்கு double acting.வந்தியத்தேவனும் நானே; அருண்மொழிவர்மனும் நானே..திரைப்படமாக வந்தால்..அப்பட...1 ஆண்டு முன்பு
-
கிறுக்கல்கள் - நீ தத்தி தத்தி வந்து தங்கமுலாம் பூசவே ஏங்கி தவித்து கொண்டிருக்கிறது நம் வீட்டு சுவர்கள்!..4 ஆண்டுகள் முன்பு
-
நேர்கொண்ட பார்வை- இந்த மாதிரி படமெல்லாம் எதுக்கு? - அஜித் ஏன் திடீர்னு ரிமேக் பண்ணாருனு ஒரு சந்தேகம் வந்துச்சு. [image: Image result for nerkonda paarvai] சந்தேகத்த சுக்குநூறு ஆக்கி தனது சமூக பார்வையை நேர்கொ...4 ஆண்டுகள் முன்பு
-
குமாரி 21 F – செம ஹாட் மச்சி - எனக்கு இயக்குனர் சுகுமாரின் திரைப்படங்கள் என்றால் மிகவும் பிடிக்கும். தன் எழுத்தில் ஏதோ ஒரு மேஜிக்கை வைத்துக் கொண்டிருப்பவர் அவர். ஊருக்கே பிடித்த ’ஆர்யா’ ...8 ஆண்டுகள் முன்பு
-
வலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள் - கொண்டல் வண்ணனைக் கோவலனாய் வெண்ணை உண்ட வாயன் என்னுள்ளங்கவர்ந்தானை அண்டர் கோன் அணியரங்கன் என்னமுதினைக் கண்ட கண்கள் மற்றொன்றினைக் காணாவே ஆண்டாள்.. திருப்பாண...8 ஆண்டுகள் முன்பு
-
Rewarding Life - *"If you want your life to be more rewarding, you have to change the way you think."* * - Oprah Winfrey*11 ஆண்டுகள் முன்பு
-
உன்னுடன் வாழ்கிறேன்.. - அவனது கண்கள் நடைப்பழகாத இரு குழந்தைகள் என்னை காணாத அந்த ஒரு நிமிடம்.. என்னுள் இருக்கும் உன்னோடு சேர்ந்து மிதந்து போகிறேன் மேகமாய்.. என்னுடன் நான் உணர்...12 ஆண்டுகள் முன்பு
-
-
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக