ராவணன் - பத்துத்தலை

ராவணன் - டண் டண் டண்

நீண்ண்ண்ண்ட இடைவெளிக்குப்பின் விக்ரம் + மணிரத்னம் + வைரமுத்து + கார்த்திக் + ஐஸ்வர்யா

சொல்லவே தேவையில்லை படத்தின் திரைக்கதையின் அழுத்தம் பற்றி..மணிரத்னம் படம் என்றால் திரைக்கதை தழருத்தமாகவே இருக்கும்..இருக்கிறது

கதை என்று பார்த்தால் காட்டில் இருந்து கொண்டு ஒடுக்கப்பட்ட இனத்துக்காக போராடும் முரட்டு விக்ரம் அவரது அண்ணன் பிரபு ஒருபுறமும் இவர்களை அடக்க ப்ரித்விராஜ் (என்கவுண்டர் போலிஸ்) தலைமையில் ஒரு குழு..

சந்தர்ப்ப சூழ்நிலையில் திருமகத்தன்று போலீஸால் கைது செய்யப்பட்டு கற்பழிக்கப்படுகிறார் விக்ரமின் (வீரய்யா + வீரா) தங்கை ப்ரியாமணி.

அதற்குக்காரணமான போலீஸாரையும் தன்னைக்கொல்லத்துடிக்கும் ப்ரித்விராஜையும் விக்ரம் எப்படி பழிவாங்குகிறார்? அதில் வெற்றியடைந்தாரா என்பதே கதை..

ப்ரித்விராஜை பழிவாங்க அவரது மனைவி ஐஸ்வர்யாவை கடத்தும் ராமாயண ராவணனாக விக்ரம் தூள் கிளப்புகிறார்..அங்கங்கே பிதாமகனின் சாயல் வந்து போவதை தவிர்க்கமுடியவில்லை..

ஐஸ் நடிப்பில் ரொம்பவே முதிர்ச்சி தெரிகிறது..தமிழ் நடிகைகள் கொஞ்சம் பார்த்து பழகட்டும்

பிரபுவும் கார்த்திக்கும் நகைச்சுவை + நடிப்பினால் நம்மைக்கவர்கிறார்கள்..ப்ரித்வியும் தனது பங்கிற்கு நடிப்பில் வெளுத்துக்கட்டியிருக்கிறார்..

ஒளிப்பதிவும் எடிட்டிங்கும் உலகத்தரம்..அதிலும் காட்டு லொக்கேசனும் அதன் பின்னணியில் பொழியும் மெல்லிய மழையும் கவிதை..

பழைய பழிவாங்கற் பாணிக்கதையை வேறு வேறு லொக்கேசனில் வித்தியாசமாகவும் கொஞ்சம் அழுத்தமாகவும் பதிக்க முயன்று அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார் மணி..

ப்ரியாமணி கலகலக்க வைத்து கடைசியில் கண்ணீர் சிந்த வைக்கிறார்..

படத்தின் முதுகெலும்பு வேறென்ன இசைதான்..உசுரே போகுதே யில் தொடங்கி நான் வருவேன் வரை பாடல்களும் பின்னணி இசையும் படு நேர்த்தி..படத்தோடு ஒன்றிப்போகும் பின்னணி இசையில் ரஹ்மானின் உழைப்பு தெளிவாகத்தெரிகிறது.

தொங்கு பாலத்தில் நடக்கும் க்ளைமேக்ஸ் சண்டைக்காட்சி பக் பக் ரகம்..பார்க்கவே பயங்கரமாக இருக்கிறது..அதே போலவே மற்றைய சண்டைக்காட்சிகளும்..

மொத்தத்தில் ராவணன் - பத்துத்தலை

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Related Posts with Thumbnails

YOUTUBE TOP VIDEO

எனது வலைப்பதிவு பட்டியல்