Facebook Badge
ராவணன் - பத்துத்தலை
ராவணன் - டண் டண் டண்
நீண்ண்ண்ண்ட இடைவெளிக்குப்பின் விக்ரம் + மணிரத்னம் + வைரமுத்து + கார்த்திக் + ஐஸ்வர்யா
சொல்லவே தேவையில்லை படத்தின் திரைக்கதையின் அழுத்தம் பற்றி..மணிரத்னம் படம் என்றால் திரைக்கதை தழருத்தமாகவே இருக்கும்..இருக்கிறது
கதை என்று பார்த்தால் காட்டில் இருந்து கொண்டு ஒடுக்கப்பட்ட இனத்துக்காக போராடும் முரட்டு விக்ரம் அவரது அண்ணன் பிரபு ஒருபுறமும் இவர்களை அடக்க ப்ரித்விராஜ் (என்கவுண்டர் போலிஸ்) தலைமையில் ஒரு குழு..
சந்தர்ப்ப சூழ்நிலையில் திருமகத்தன்று போலீஸால் கைது செய்யப்பட்டு கற்பழிக்கப்படுகிறார் விக்ரமின் (வீரய்யா + வீரா) தங்கை ப்ரியாமணி.
அதற்குக்காரணமான போலீஸாரையும் தன்னைக்கொல்லத்துடிக்கும் ப்ரித்விராஜையும் விக்ரம் எப்படி பழிவாங்குகிறார்? அதில் வெற்றியடைந்தாரா என்பதே கதை..
ப்ரித்விராஜை பழிவாங்க அவரது மனைவி ஐஸ்வர்யாவை கடத்தும் ராமாயண ராவணனாக விக்ரம் தூள் கிளப்புகிறார்..அங்கங்கே பிதாமகனின் சாயல் வந்து போவதை தவிர்க்கமுடியவில்லை..
ஐஸ் நடிப்பில் ரொம்பவே முதிர்ச்சி தெரிகிறது..தமிழ் நடிகைகள் கொஞ்சம் பார்த்து பழகட்டும்
பிரபுவும் கார்த்திக்கும் நகைச்சுவை + நடிப்பினால் நம்மைக்கவர்கிறார்கள்..ப்ரித்வியும் தனது பங்கிற்கு நடிப்பில் வெளுத்துக்கட்டியிருக்கிறார்..
ஒளிப்பதிவும் எடிட்டிங்கும் உலகத்தரம்..அதிலும் காட்டு லொக்கேசனும் அதன் பின்னணியில் பொழியும் மெல்லிய மழையும் கவிதை..
பழைய பழிவாங்கற் பாணிக்கதையை வேறு வேறு லொக்கேசனில் வித்தியாசமாகவும் கொஞ்சம் அழுத்தமாகவும் பதிக்க முயன்று அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார் மணி..
ப்ரியாமணி கலகலக்க வைத்து கடைசியில் கண்ணீர் சிந்த வைக்கிறார்..
படத்தின் முதுகெலும்பு வேறென்ன இசைதான்..உசுரே போகுதே யில் தொடங்கி நான் வருவேன் வரை பாடல்களும் பின்னணி இசையும் படு நேர்த்தி..படத்தோடு ஒன்றிப்போகும் பின்னணி இசையில் ரஹ்மானின் உழைப்பு தெளிவாகத்தெரிகிறது.
தொங்கு பாலத்தில் நடக்கும் க்ளைமேக்ஸ் சண்டைக்காட்சி பக் பக் ரகம்..பார்க்கவே பயங்கரமாக இருக்கிறது..அதே போலவே மற்றைய சண்டைக்காட்சிகளும்..
மொத்தத்தில் ராவணன் - பத்துத்தலை
YOUTUBE TOP VIDEO
ஷிப்லியின் கவிதைகள்
எனது வலைப்பதிவு பட்டியல்
-
Google வேண்டாம் - Perplexity.ai போதும்?! - சாட்ஜிபிடி, மைக்ரோசாப்ட் கோபைலட் போன்ற செயற்கை நுண்ணறிவு (சுருக்கமாக செய்யறிவு) chatbot-களுக்கு போட்டியாக perplexity.ai வந்து மக்கள் மனதை கவர்ந்த...1 மாதம் முன்பு
-
பொன்னியின் செல்வன் - ஒலி நூல் - பொன்னியின் செல்வன் - என் பால்ய வயதுக் கனவு அது. என் கனவுகளில் எனக்கு double acting.வந்தியத்தேவனும் நானே; அருண்மொழிவர்மனும் நானே..திரைப்படமாக வந்தால்..அப்பட...1 ஆண்டு முன்பு
-
கிறுக்கல்கள் - நீ தத்தி தத்தி வந்து தங்கமுலாம் பூசவே ஏங்கி தவித்து கொண்டிருக்கிறது நம் வீட்டு சுவர்கள்!..4 ஆண்டுகள் முன்பு
-
நேர்கொண்ட பார்வை- இந்த மாதிரி படமெல்லாம் எதுக்கு? - அஜித் ஏன் திடீர்னு ரிமேக் பண்ணாருனு ஒரு சந்தேகம் வந்துச்சு. [image: Image result for nerkonda paarvai] சந்தேகத்த சுக்குநூறு ஆக்கி தனது சமூக பார்வையை நேர்கொ...4 ஆண்டுகள் முன்பு
-
குமாரி 21 F – செம ஹாட் மச்சி - எனக்கு இயக்குனர் சுகுமாரின் திரைப்படங்கள் என்றால் மிகவும் பிடிக்கும். தன் எழுத்தில் ஏதோ ஒரு மேஜிக்கை வைத்துக் கொண்டிருப்பவர் அவர். ஊருக்கே பிடித்த ’ஆர்யா’ ...8 ஆண்டுகள் முன்பு
-
வலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள் - கொண்டல் வண்ணனைக் கோவலனாய் வெண்ணை உண்ட வாயன் என்னுள்ளங்கவர்ந்தானை அண்டர் கோன் அணியரங்கன் என்னமுதினைக் கண்ட கண்கள் மற்றொன்றினைக் காணாவே ஆண்டாள்.. திருப்பாண...8 ஆண்டுகள் முன்பு
-
Rewarding Life - *"If you want your life to be more rewarding, you have to change the way you think."* * - Oprah Winfrey*11 ஆண்டுகள் முன்பு
-
உன்னுடன் வாழ்கிறேன்.. - அவனது கண்கள் நடைப்பழகாத இரு குழந்தைகள் என்னை காணாத அந்த ஒரு நிமிடம்.. என்னுள் இருக்கும் உன்னோடு சேர்ந்து மிதந்து போகிறேன் மேகமாய்.. என்னுடன் நான் உணர்...12 ஆண்டுகள் முன்பு
-
-
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக